6 வயது சிறுமி கூட்டுப்பாலியல்.. ஆபாச படங்களை பார்த்து 15 வயது சிறுவன் செய்த கோரம் : அதிர்ச்சி சம்பவம்!!

செல்போனில் ஆபாச படங்களை பார்த்து 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் பட்ரோ கிராமத்தை சேர்ந்த பெண் தனது 6 வயது மகளை அழைத்துக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இந்து மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு தாயும் அவரது மகளும் பிரிந்துள்ளனர். தனது மகள் வீட்டிற்கு சென்றிருப்பார் என்று எண்ணிய தாய் வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் தனது மகள் இல்லை என்பதை அறித்த தாய் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான 6 வயது சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது, சனிக்கிழமை காலை அந்த கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கூடத்தில் சிறுமி பிணமாக கிடப்பதை கண்டுபிடித்தனர்.

சிறுமியின் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், உயிரிழந்த 6 வயது சிறுமி கடைசியாக 15 வயது சிறுவனுடன் இருந்துள்ளார். அந்த சிறுவனை பிடித்து நடத்திய விசாரணையில் சிறுமியை ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்து சென்று அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததையும், சிறுமி கத்தி கூச்சலிட்டதால் கொலை செய்ததையும் சிறுவன் ஒப்புக்கொண்டான்.

மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சிறுவன் தனது சொல்போனில் தொடர்ச்சியாக ஆபாச படம் பார்க்கும் பழக்கம் கொண்டவன் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

1 hour ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

1 hour ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

2 hours ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

2 hours ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

3 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

3 hours ago

This website uses cookies.