மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காரில் இருந்த பாட்டி, பேரன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீ சில்லா மாவட்டம் பசூல் நகர் அருகே நடைபெற்ற இந்த விபத்தில் காரில் இருந்த பாட்டி பேரன் ஆகியோர் மூச்சுத் திணறி மரணமடைந்த நிலையில் இரண்டு பேர் உயிர் தப்பினர்.
ஜகத்தியாலா மாவட்டம் சல்ஹல் கிராமத்தை சேர்ந்த நரேஷ் என்பவர் குடும்பத்துடன் இன்று காலை காரில் ஹைதராபாத் சென்று கொண்டிருந்தார்.
கார் ராஜன்னா ஸ்ரீ சில்லா மாவட்டம் ப்சூல் நகர் அருகே காட்டாறு ஒன்றின் மீது இருக்கும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. சமீபத்தில் பெய்து கனமழை காரணமாக அந்த பாலத்தின் மீது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் நிலையில் பாலத்தை கடக்க முயன்ற காரை ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம் இழுத்து சென்றது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கார் மழை வெள்ளத்தில் இழுத்து செயல்படப்படுவதை பார்த்து அதனை மீட்க முயன்றனர்.
ஆனால் மழை வெள்ளத்தின் வேகம் காரணமாக அவர்களால் மீட்க இயலவில்லை.
இந்த நிலையில் போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டு ஜேசிபி இயந்திரத்துடன் வந்த போலீசார் காரை மீட்கும் முயற்சி ஈடுபட்டனர்.
அப்போது காரில் இருந்த டிரைவர் ரிசான், நரேஷ் ஆகியோர் காரின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து வெளியேறி நீந்தி கரையேறினர்.காரில் இருந்த கங்கா, அவருடைய இரண்டு வயது பேரன் கிட்டு ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காரிலேயே மரணமடைந்தனர்.
இந்த நிலையில் தீவிர முயற்சிக்குபின் கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள வேமுல வாடா போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.