பெங்களூரையடுத்த சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஷி (வயது 19), ஏலஹங்கா கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ பயின்றுவந்தார்.
நேற்று, கல்லூரி முடிந்து பஸ்சில் திப்பூர் வந்திறங்கி, வழக்கம்போல வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் ராஷியை வழிமறித்து, தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஷியின் கழுத்தை அறுத்து, ரத்தவெள்ளத்தில் ராஷியை அங்கேயே விட்டுத் தப்பிச்சென்றனர்.
ரத்தவெள்ளத்தில் துடிதுடித்துக்கிடந்த ராஷியை அக்கம் பக்கத்தினர் மீட்பதற்குள், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து, ராஜனுகுந்தே பகுதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் விசாரணையில், கல்லுாரி மாணவி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. காதல் விவகாரத்தால் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்.
அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடிவருகிறோம். ராஷியின் மொபைல் போன் அழைப்புகளை ஆய்வுசெய்து, அவரின் நண்பர்களிடமும் விசாரிக்கிறோம் என்றனர்.
பெங்களூரில் காதல் விவகாரம் தொடர்பாக, கல்லுாரி மாணவிகள் கொலைசெய்யப்படுவது அதிகரித்து வருவதால், மாணவிகளும், பெற்றோரும் அச்சமடைந்திருக்கின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.