விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் ஷா, அவரது நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்காக, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் மிக பிரமாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் ஷா மற்றும் நிறுவன தலைவர் விஸ்வநாத் ராஜு தட்லா ஆகியோர் சினிமா பாணியில் என்ட்ரி கொடுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கிரேன் உதவியுடன் இருவரும் 20 அடி உயரத்தில் இரும்பு கூண்டில் நின்றபடி நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, கூண்டின் இரும்புச் சங்கிலி ஒருபுறம் உடைந்து விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சஞ்சய் ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.