சிதைந்து போன குடும்பம்… இரு மகள்களை கொன்ற தந்தை : அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. ஸ்தம்பித்த கேரளா!
கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் பையோளி அருகே அயனிக்காட்டு பகுதியை சேர்ந்தவர் சுமேஷ். இவர் தனது மனைவி ஸ்வப்னா மற்றும் இரு மகள்களோடு வசித்து வந்தார்.
மூத்த மகள் கோபிகா பிளஸ் 1 வகுப்பும், இளைய மகள் ஜோதிகா 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் தற்போது இந்த குடும்பத்தையே சிதைத்துள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்வப்னா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சுமேஷ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தொழிலையும், குடும்பத்தையும் கவனித்து வந்த சுமேஷ், ஸ்வப்னா மறைவால் வாடியிருந்தார். இதையடுத்து கோழிக்கோடு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்ட போது இறந்தது சுமேஷ் என்பது தெரியவந்தது. உடனே அவர் வீட்டுக்கு சென்று தகவலை கூற சென்ற போலீசாருக்கு மற்றொரு ஷாக் காத்திருந்தது.
வீட்டிற்குள் வாயில் நுரை தள்ளியபடி இருமகள்களும் இறந்து கிடக்க, அக்கம்பக்கத்தில் விசாரித்த போது மனைவியின் பிரிவால் குடும்பமே மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.
இதனால் மகள்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் சுமேஷ். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண் வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.