ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் புரோதட்டூர் ஒய்.வி.எஸ்.நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் லஹரி என்ற மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
லஹரியின் நோட்டுப் புத்தகத்தில் காதல் கடிதம் கிடைத்ததையடுத்து சக மாணவர்கள் பார்த்து பள்ளியின் ஆங்கில பாடப்பிரிவு ஆசிரியை சுனந்தாவிடம் ஒப்படைத்தனர்.
அந்தக் கடிதம் அவரது பள்ளியின் முதல்வர் கஷ்ரி பிரசாத் ரெட்டியிடம் கொடுக்கப்பட்டது. இதனால் லஹரியின் தாய் பிரியாவை பள்ளிக்கு வரவழைத்தனர். அதில் கையெழுத்தின் அடிப்படையில் கடிதம் லஹரி எழுதியது இல்லை என தெரியவந்தது.
இதனையடுத்து லஹரி மற்றும் அவரது தாய் பிரியாவை அனுப்பி வைத்தனர். வகுப்பறைக்குச் சென்றதும், ஆசிரியர் சுனந்தா கடிதத்தின் மீது கேள்வி எழுப்பி லஹரியை அடித்துள்ளார்.
இதுகுறித்து லஹரி உடனடியாக தனது தாயார் பிரியாவிற்கு போன் செய்து தெரிவித்தார். பிரியா பள்ளிக்கு வந்து மகளை ஏன் அடித்தீர்கள் என்று ஆசிரியையிடம் கேட்டுள்ளார்.
இதனை அறிந்த சுனந்தா கணவர் அங்கு வந்த நிலையில் தலைமை ஆசிரியர் முன்னிலையில் இருவருக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதால் ஒருவரை ஒருவர் தலைமுடி பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டனர்.
ஆசிரியர் சுனந்தா கணவர் மாணவியின் தாய் பிரியாவை அடித்தார். இந்த விவகாரம் மண்டல கல்வி அலுவலரிடன் தெரிவிக்கப்பட்டு, பின்னர் டிஇஓவுக்கு தெரிவிக்கப்பட்டது.
டிஇஓ, சிறுமியின் தாயிடம் போனில் பேசினார்.இதனையடுத்து ஆசிரியை சுனந்தாவை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மதுபான ஊழல் புகாரை அமலாக்கத்துறை ஆளும் திமுக அரசு மீது வைத்துள்ள நிலையில், இது 2026 தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை…
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் அமீர் கான். தற்போது ரஜினிகாந்த்துடன் கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து…
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என எடப்பாடி பழனிசாமி…
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான…
சென்னையில், இன்று (மார்ச் 14) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 110 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 230…
டாஸ்மாக் ஊழலை மறைப்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசு, தொகுதி மறுசீரமைப்பு, ரூபாய் இலச்சினை மாற்றுவது என கண்ணாமூச்சி ஆடிவருகிறது என அண்ணாமலை…
This website uses cookies.