பெண் தோழியுடன் உல்லாசமாக இருக்க 41 வயது நபர் செய்த செயல் சோகத்தில் முடிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் தனது பெண் தோழியுடன் உல்லாசமாக இருப்பதாக நாக்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்துள்ளார் 41 வயது நபர். அந்தப் பெண்ணுடன் நீண்ட நேரமும், திருப்தியாகவும் உடலுறவு வைக்க வேண்டும் என் விபரீத ஆசை அந்த நபருக்கு எழுந்துள்ளது.
இதனால், தான் வாங்கி வந்த பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய வயாகரா மாத்திரையை இரண்டை எடுத்துள்ளார். அறையில் தனியாக இருந்த தனது பெண் தோழியுடன் உல்லாசமாக இருக்க அந்த இரண்டு மாத்திரைகளையும் ஒரே நேரத்தில் போட்டுள்ளார்.
அதோடு, மதுவையும் குடித்துள்ளார். இதனால், அந்த நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி எடுத்த அவரை மருத்துவமனைக்கு செல்லுமாறு அவரது பெண் தோழி கூறியுள்ளார். ஆனால், அதனை கேட்க மறுத்த அந்த நபர், சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து பதறிப் போன அவரது பெண் தோழி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறையும் போது, செரிப்ரோவாஸ்குலர் ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.