கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் கோவிந்த் நந்தகுமார். இவர் சர்ஜாபூரில உள்ள மணிப்பால் மருத்துவமனையில், நோயாளி ஒருவருக்கு லேப்ராஸ்கோப்பிக் முறையில் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய காரில் சென்று கொண்டிருந்தார்.
மருத்துவமனை 3 கிலோ மீட்டர் தொலைவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். மருத்துவமனை செல்ல பத்து நிமிடங்கள் கூட ஆகாத தொலைவு இருந்தாலும், கூகுள் மேப் அவருக்கு 45 நிமிடங்கள் வரை பயணநேரம் ஆகலாம் என காட்டியது.
இது நோயாளிக்கு மோசமான நிலையை ஏற்படுத்தலாம் என்பதால், காரிலிருந்து இறங்கிய அந்த மருத்துவர் ஓடியே மருத்துவமனை செல்ல முடிவெடுத்தார். இதனைத் தொடர்ந்து 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓடியே மருத்துவமனைக்குச் சரியான நேரத்தில் சென்று அடைந்தார்.
இது குறித்து மருத்துவர் கோவிந்த நந்தகுமார் கூறும்போது, “நல்லவேளையாக கார் டிரைவர் இருந்ததால் காரை அவரிடம் ஒப்படைத்து விட்டுக் கிளம்பினேன். நான் ஒரு தீவிர உடற்பயிற்சியாளர் என்பதால், சாலையில் ஓடுவது என்பது எளிதாகவே இருந்தது. இப்படி இறங்கி நடப்பது எனக்கு புதிதான ஒன்று அல்ல. பல நேரங்களில் இது போன்று அவசர நிலை ஏற்படும் போது மருத்துவமனைக்கு ஓடி இருக்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ரயில் தண்டவாளங்களைக் கூட இப்படிக் கடந்து ஓடியிருக்கிறேன். நான் திடகாத்திரமாக இருப்பதால் என்னால் இதைச் செய்ய முடிகிறது. ஆம்புலன்ஸில் நோயாளியுடன் காத்திருக்கும் உறவினர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். ஆம்புலன்ஸிற்கு கூட வழிவிட இந்த நகரில் இடமில்லை என்றார்.
நோயாளிக்காக 3 கிலோ மீட்டர் ஓடி மருத்துவமனை சென்று அறுவை சிகிச்சை அளித்த மருத்துவரின் இந்த செயலுக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.