சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே பெங்களூரில் இருந்து பயணிகளுடன் விஜயவாடா சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
பெங்களூரில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று விஜயவாடா சென்று கொண்டிருந்தது.
பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். இன்று காலை பலமநேர் அருகே உள்ள கால்நடை பண்ணை அருகே வேகமாக சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து டிவைடரில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது..
விபத்தில் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர்.ஒருவர் உயிரிழந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்த பலமனேர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பலமனேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் மரணம் அடைந்தவரின் உடல் பலமநேர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள பலமனேர் போலீசார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மிதமிஞ்சிய வேகத்தில் பேருந்து சென்றதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.