திருமணமான பெண்ணை கடத்தி தினம் தினம் பலாத்காரம் செய்த சைக்கோ : இடத்தை மாற்றி மாற்றி இச்சையை தீர்த்த கொடூரன்!!

திருமணமான பெண்ணை பலவந்தமாக கடத்தி சென்று இரண்டு மாதம் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பதி மாவட்டம் பலிஜபள்ளியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி சின்னா. கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி சின்னாவை அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் பலவந்தமாக கடத்தி சென்றார்.

அப்போது முதல் வெவ்வேறு இடங்களில் சின்னாவை அடைத்து வைத்த நாகராஜ் கடந்த இரண்டு மாத காலமாக பலாத்காரம் செய்து வந்தார்.

இது தொடர்பாக ராமச்சந்திராபுரம் காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்திருந்தார். ஆனால் போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் பிரகாஷ் கடந்த ஆறாம் தேதி திருப்பதி எஸ் பி அலுவலகத்தில் தன்னுடைய மனைவியை நாகராஜ் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தார்.

இந்த நிலையில் சின்னா, தன்னை வீட்டுக்கு அனுப்பி வைக்கா விட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். எனவே நாகராஜ் நேற்று சின்னாவை பலிஜபள்ளி கிராமத்திற்கு அழைத்து வந்து விட்டு சென்று விட்டார்.

அவமானம் தாங்க முடியாமல் சின்னா தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச சென்ற கணவன் மற்றும் உறவினர்கள் காப்பாற்றினர்.

இந்த நிலையில் எஸ் பி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் திருப்பதி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி மகளிர் காவல் நிலைய போலீசார் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் காலம் கடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

10 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

21 minutes ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

1 hour ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

1 hour ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

This website uses cookies.