ராமர் கோவிலில் அபூர்வ நிகழ்வு… ராமரின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி..புல்லரிக்க வைக்கும் VIDEO!!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் காட்டப்பட்டு மிகவும் பிரமாண்டமாக கும்பாபிஷேகம் விழா நடத்தப்பட்டது. இந்தியாவின் ஸ்டார் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் மிக பெரிய நிகழ்வாக இது பார்க்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று ராமரை வழிபட்டு வருகின்றனர்.
கோவிலிலும் தினந்தோறும் விதவிதமான பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவிலில் இன்று ராம் நவமி விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
ராம் நவமி விழாவின் ஒன்பதாம் நாளான இன்று சூரிய அபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சரியாக 12.16 மணிக்கு கோவில் கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.
சூரிய ஒளி ராமரின் நெற்றியில் நேரடியாக விழும் அளவிற்கு நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர் ராமர் கோவில் வடிவமைப்பாளர்கள். கண்ணாடிகள், லென்சுகள் கொண்டு இந்த வடிவமைப்பு செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.
மேலும் இந்த சூரிய ஒளி ராமரின் நெற்றியில் சும்மர் 75 மில்லி மிட்டர் அளவு விழும்படியாக வடிவமைத்துள்ளனர். அதேபோல் இந்த நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். 5 நிமிடமே நீடிக்கும் இந்த அறிய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் ராமர் கோவிலில் கூடினர்.
மேலும் படிக்க: கழிவறையில் கட்டு கட்டாக பணம்… பணப்பட்டுவாடா செய்ததா பாஜக? கூட்டணி கட்சி நிர்வாகி வீட்டில் அதிர்ச்சி!
கோவில் கருவறைக்குள் நடைபெறும் இந்த நிகழ்வை பக்தர்கள் பார்க்கும்படியாக சும்மர் 100க்கும் அதிகமான எல்.இ.டி. திரைகளை கோவில் நிர்வாகம் அமைத்துள்ளது. ராமர் கோவில் திறந்த பின் நடைபெறும் முதல் அபூர்வ நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.