உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் போகரி வட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆரம்ப நிலை பள்ளிக்கூடமான இங்கு ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் ஆசிரியைக்கு பள்ளி சிறுவன் ஒருவன் கையில் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ அதிகமானோரால் பார்க்கப்பட்ட நிலையில் ஆசிரியை மீது விமர்சனங்கள் குவிந்தன.
இதையடுத்து அரசு நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் கல்வித்துறை அதிகாரி சஞ்சீவ் குமார் விசாரணை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியையின் பெயர் ஊர்னிலா சிங் என தெரியவந்தது.
இதேபோன்று மசாஜ் செய்தது தொடர்பாக இதே ஆசிரியை மீது மேலும் சில புகார்கள் முன்பு வந்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் ஊர்னிலா சிங் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வீடியோ காட்சியில் ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகியுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் நிலையில், அவர்களை பணியாளர்களைப் போன்று ஆசிரியை பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.