ஸ்ரீசைலம் கோவிலில் பயங்கர சத்தத்துடன் நடந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோவில் ஆன அந்த கோவிலுக்கு பெருமளவில் பக்தர்கள் வருவது வழக்கம்.
அங்கு இன்று துவங்கி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரம்மோற்சவ துவக்க நாளான இன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அமைக்கப்பட்டிருக்கும் சமையல் கூடத்திற்கு வெளியே இருந்த பாய்லர் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது.
சாதம் சமைப்பதற்காக தண்ணீரை ஆவியாக்கி சமையல் அறைக்கு அனுப்புவதற்காக அங்கு ராட்சத பாய்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு பாய்லர் வெடித்து ஊழியர்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக கோவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரம்மோற்சவ துவக்க நாளன்று நடைபெற்ற விபத்து காரணமாக கோவில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ஸ்ரீசைலம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.