மைசூர்: கர்நாடகாவில் டிரக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை ஆக்ரோஷமாக காட்டு யானை விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிரக்கிங் என்ற பெயரில் வனவிலங்குகளை அதன் இருப்பிடத்திற்கே சென்று பார்க்கும் சுற்றுலாப் பயணிகளை வனவிலங்கும் தாக்க முயலும் நிகழ்வுகளும் தற்போது அதிகரிக்கத் தொடங்கி விட்டது.
இதுபோன்ற நிகழ்வுதான் கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள கபினி பகுதியில் நடந்துள்ளது. கபினி பகுதிக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றிருந்த போது, வனப்பகுதியில் ஜீப்பில் டிரக்கிங் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மரங்களுக்கு இடையே மறைந்திருந்த பெரிய ஆண் காட்டு யானை ஒன்று, அந்த ஜீப்பின் முன்னால் திடீரென வந்து நின்றது.
இதை பார்த்த அவர்கள் பயத்தில் அலறியுள்ளனர். அவர்கள் அலறல் சத்தத்தை கேட்டதும் ஆக்ரோஷமான காட்டு யானை ஜீப்பை துரத்த தொடங்கியது. யானை முன்னால் இருப்பதால் டிரைவரால் ஜீப்பை உடனடியாக திருப்ப முடியவில்லை. எனினும், மிக சாதுரியமாக ரிவர்ஸ் கியர் போட்டு ஜீப்பை பின்னால் வேகமாக இயக்கினார். ஆனால் காட்டு யானை விடாமல் கோபத்தில் பிளிறிய படியே ஜீப்பை துரத்தியது.
ஒருகட்டத்தில் ஜீப்புக்கு மிக நெருக்கமாவே யானை வந்தது. ஆனால் சற்றும் பிசகாமல் ஜீப்பை சாமர்த்தியமாக பின்னால் ஓட்டிச் சென்றார் அந்த டிரைவர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.