திருப்பதி : ஏழுமலையான் கோவில் சமீபத்தில் பாட்டிலால் தன்னைத் தானே குத்தி கொண்டு கர்நாடக வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் சமீபத்தில் கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கண்ணாடி பாட்டிலால் தன்னுடைய வயிற்று தானே குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவை சேர்ந்த சாய்குமார் என்பவர் இன்று மாலை ஏழுமலையான் கோவில் சமீபத்தில் இருக்கும் திருமலைநம்பி கோவில் அருகே கண்ணாடி பாட்டிலால் தன்னுடைய வயிற்றில் தானே குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கவனித்த அங்கிருந்த பக்தர்கள் செய்வது அறியாது திகைத்து அச்சத்தில் உறைந்து போயினர். பக்தர்கள் எழுப்பிய கூக்குரலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் விரைந்து வந்து படுகாயமடைந்த சாய்குமாரை மீட்டு திருப்பதி மலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை திருப்பதி உள்ள அரசு ரூயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள திருமலை போலீசார் சாய்குமாரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் பற்றிய விசாரணை நடத்துகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.