2029ல் பாஜக இல்லாத இந்தியாவை ஆம் ஆத்மி உருவாக்கும் : நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கெஜ்ரிவால் சூளுரை!

2029ல் பாஜக இல்லாத இந்தியாவை ஆம் ஆத்மி உருவாக்கும் : நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கெஜ்ரிவால் சூளுரை!

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரம் நடத்துவதாகவும், அரசை கவிழ்க்க முயற்சிப்பதாகவும் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டி வந்தார்.

இதனால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களுடன் தான் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழல் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது இது இரண்டாவது முறையாகும்.

அந்தவகையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், டெல்லி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.

70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனர். அதன்படி, ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவாக 54 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவான நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இரண்டு பேர் சிறையில் உள்ள நிலையில், மீதமுள்ளவர்கள் தனிப்பட்ட காரணங்களால் சபைக்கு வரவில்லை எனவும் தகவல் கூறப்படுகிறது. இன்று டெல்லி சபையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிக்கிறது. பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால்தான் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறது.

என்னை கைது செய்ய பாஜக விரும்புகிறது. என்னை கைது செய்யலாம், எனது எண்ணங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாட்டின் 3வது கட்சியாக ஆம் ஆத்மி இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஒரு எம்எல்ஏக்கள் கூட பிரிந்து செல்லவில்லை. பாஜக யாருக்காவது பயந்தால் அது ஆம் ஆத்மிதான்.

எனவே, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தோற்கவில்லை என்றால், 2029இல் இந்தியாவை பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மி விடுவிக்கும் என்றும் பாஜக இல்லாத நாட்டை ஆம் ஆத்மி உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

3 hours ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

3 hours ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

4 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

5 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

5 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

6 hours ago

This website uses cookies.