திருமலை ; திருப்பதி – ஏழுமலையானை வழிபட்ட நடிகர் தனுஷை வீடியோ எடுக்க விடாமல் தடுத்து நிறுத்திய பவுன்சர்களுடன் செய்தியாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று திருப்பதியில் நடைபெற்றது. போக்குவரத்து இடையூறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பிற்கு அளிக்கப்பட்ட அனுமதியை திருப்பதி போலீசார் ரத்து செய்தனர்.
இந்த நிலையில், இன்று தனுஷ் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி கும்பிட்ட பின் அவருக்கு கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தேவஸ்தான அட்சகர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர். தனுசுடன் சுமார் 30க்கும் மேற்பட்ட பவுன்சர்களும் திருப்பதி மலைக்கு வந்திருந்தனர். அவர் திருப்பதி மலையில் கால் வைத்தது முதல் அடிக்கு ஒருவராக நின்று கொண்டிருந்த பவுன்சர்கள் அவருக்கு தீவிர பாதுகாப்பு அளித்து வந்தனர்.
ஏழுமலையானை வழிபட்ட பின் வெளியில் வந்த அவரிடம் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் அங்கு காத்திருந்தனர். அப்போது அங்கு இருந்த பவுன்சர்கள் வீடியோ எடுக்க கூடாது என்று தடுக்க முயற்சித்தனர். இதனால் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிப்பதிவாளர்கள், பவுன்சர்கள் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் பவுன்சர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.