கேரளா முன்னணி நடிகை குறித்து சமூகவலைத்தலங்களில் அவதூறு பரப்பியதாக பிரபல இயக்குநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் பிரபல நடிகரான திலிப் ன் முன்னாள் மனைவியும், தமிழில் அசுரன் உட்பட தமிழ், மலையாள பாடங்களின் முன்னணி நடிகையுமான மஞ்சுவாரியர் குறித்து பிரபல இயக்குநரும், வழக்கறிஞருமான சணல்குமார் சசிதரன் என்பவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
அதில், மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து எனவும், சிலர் பிடியில் சிக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மஞ்சுவாரியர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்து வந்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மஞ்சுவாரியர் தன்னை மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த நிலையில், கேரள மாநிலம் பாறசாலையில் வைத்து எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசார் சணல் குமாரை கைது செய்தனர். தமிழக கேரள எல்லையில் உள்ள பாறசாலை மகாதேவர் கோவிலில் குடும்படுத்துடன் தரிசனம் செய்யும் போது, போலீசார் கைது செய்து எர்ணாகுளம் அழைத்து சென்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.