டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கில் கைதான ஷீசன்கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை துனிஷா சர்மா (வயது21) ‘அலி பாபா: தாஸ்தன்-இ-காபூல்’ டி.வி. தொடருக்காக கடந்த 24-ந் தேதி வசாயில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். திடீரென அவர் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முன்னாள் காதலனும், சக நடிகருமான ஷீசன் கானை (27) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை காலம் முடிந்து இன்று போலீசார் அவரை வசாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். முன்னாள் காதலன் ஷீசன் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் டி.வி. நடிகை துனிஷா சர்மாவை மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக அவரது தாய் வனிதா சர்மா குற்றம்சாட்டி இருந்தார். துனிஷா சர்மா மரணத்தை கொலை வழக்கமாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.