திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாட்களில் 1 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நோய்த்தொற்று குறைவு மற்றும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி காரணமாக கூட்டம் அலை மோதுகிறது.
இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக சனிக்கிழமை ஒரே நாளில் 89 ஆயிரத்து 318 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக 3 கோடியே 76 லட்ச ரூபாய் செலுத்தினர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அதிகப்படியாக ஒரே நாளில் 90 ஆயிரத்து 885 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக ரூபாய் 4 கோடியே 18 லட்சம் செலுத்தினர். இன்று பக்தர்கள் வருகை சற்று குறைந்ததை அடுத்து, காலை நிலவரப்படி வைகுண்டம் பக்தர்கள் காத்திருப்பு 18 அறைகள் நிரம்பி 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.