திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாட்களில் 1 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நோய்த்தொற்று குறைவு மற்றும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி காரணமாக கூட்டம் அலை மோதுகிறது.
இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக சனிக்கிழமை ஒரே நாளில் 89 ஆயிரத்து 318 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக 3 கோடியே 76 லட்ச ரூபாய் செலுத்தினர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அதிகப்படியாக ஒரே நாளில் 90 ஆயிரத்து 885 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக ரூபாய் 4 கோடியே 18 லட்சம் செலுத்தினர். இன்று பக்தர்கள் வருகை சற்று குறைந்ததை அடுத்து, காலை நிலவரப்படி வைகுண்டம் பக்தர்கள் காத்திருப்பு 18 அறைகள் நிரம்பி 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.