தெலுங்கு திரைப்பட ( டோலிவுட் ) இளம் ஹீரோ ராஜ் தருண் மீது லாவண்யா என்ற இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் ஹீரோ ராஜ் தருண் நடித்த ‘திரகபாதரா சாமி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ராஜ் தருண் மீது லாவண்யா என்ற இளம்பெண் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ராஜ் தருண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப உடல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு 11 ஆண்டுகளாக ஒரு கோயிலில் திருமணம் செய்து ஒன்றாக இருந்தோம் என லாவண்யா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ராஜ் தருண் தனது படத்தில் நடிக்கும் கதாநாயகியுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை விட்டு பிரிந்து விட்டதாகவும் 3 மாதங்களுக்கு முன்பு ராஜ் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூரில் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.
தன்னை கைவிடாவிட்டால் கொலை செய்து உடல் இருக்கும் இடம் கூட தெரியாமல் அழித்து விடுவதாகவும் மிரட்டி உள்ளதாக லாவண்யா எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.
மேலும் ராஜ் தருண் தான் தனது உலகம் என்று குறிப்பிட்டுள்ள லாவண்யா முன்பு போதைப்பொருள் வழக்கில் தன்னை சிக்க வைத்து கைது செய்யப்பட்டு 45 நாட்கள் சிறையில் இருந்ததாகவும், அப்போது ராஜ் தனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.