தெலுங்கு திரைப்பட ( டோலிவுட் ) இளம் ஹீரோ ராஜ் தருண் மீது லாவண்யா என்ற இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் ஹீரோ ராஜ் தருண் நடித்த ‘திரகபாதரா சாமி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ராஜ் தருண் மீது லாவண்யா என்ற இளம்பெண் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ராஜ் தருண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப உடல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு 11 ஆண்டுகளாக ஒரு கோயிலில் திருமணம் செய்து ஒன்றாக இருந்தோம் என லாவண்யா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ராஜ் தருண் தனது படத்தில் நடிக்கும் கதாநாயகியுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை விட்டு பிரிந்து விட்டதாகவும் 3 மாதங்களுக்கு முன்பு ராஜ் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூரில் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.
தன்னை கைவிடாவிட்டால் கொலை செய்து உடல் இருக்கும் இடம் கூட தெரியாமல் அழித்து விடுவதாகவும் மிரட்டி உள்ளதாக லாவண்யா எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.
மேலும் ராஜ் தருண் தான் தனது உலகம் என்று குறிப்பிட்டுள்ள லாவண்யா முன்பு போதைப்பொருள் வழக்கில் தன்னை சிக்க வைத்து கைது செய்யப்பட்டு 45 நாட்கள் சிறையில் இருந்ததாகவும், அப்போது ராஜ் தனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.