விவசாயம் தொடர்பாக நடைபெற்ற டிவி நேரலையில் பங்கேற்ற நபர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் மூலமாக அந்தந்த மாநில மொழிகளில் தொலைக்காட்சி சேனல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் மலையாள மொழியில் தூர்தர்ஷன் சேனலில் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நடந்த மாலை 6.30 மணிக்கு நேரலை நிகழ்ச்சியில் கேரள விவசாய பல்கலை.,யில் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த அனி எஸ்.தாஸ் (59) என்பவரும் பங்கேற்று இருந்தார். அப்போது, விவசாயம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கையில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், பதறிப்போன தொகுப்பாளர்கள், தொலைக்காட்சி ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடல் ஒப்படைக்கப்பட்டது.
டிவி நேரலையின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.