விவசாயம் தொடர்பாக நடைபெற்ற டிவி நேரலையில் பங்கேற்ற நபர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் மூலமாக அந்தந்த மாநில மொழிகளில் தொலைக்காட்சி சேனல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் மலையாள மொழியில் தூர்தர்ஷன் சேனலில் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நடந்த மாலை 6.30 மணிக்கு நேரலை நிகழ்ச்சியில் கேரள விவசாய பல்கலை.,யில் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த அனி எஸ்.தாஸ் (59) என்பவரும் பங்கேற்று இருந்தார். அப்போது, விவசாயம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கையில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், பதறிப்போன தொகுப்பாளர்கள், தொலைக்காட்சி ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடல் ஒப்படைக்கப்பட்டது.
டிவி நேரலையின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.