தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த, தர்மபுரி வடக்கு ஒன்றிய பா.ஜ.க, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பங்கேற்றோர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தை செயல்படுத்த, கடந்தாண்டு மட்டும், 58 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தில், மாவட்டத்தில், 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
தமிழகத்துக்கு தேசிய சுகாதார திட்டத்துக்காக, 3,226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சுகாதார துறையில் பல்வேறு திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த, தமிழக அரசுக்கு மத்திய அரசு, 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், அத்திட்டங்களில் பிரதமர் மோடியின் படம், இந்திய அரசின் சின்னங்களை தமிழக அரசு வெளியிடவில்லை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. மத்திய அரசு இதற்கான நிதியை மறு மதிப்பீடு செய்து, 1,977 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இந்த பணிகள், 2026க்குள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை, ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.