திருப்பதியில் நாளை அனைத்து விஐபி தரிசனங்களும் ரத்து : பிரதமர் மோடி வருகையால் உச்சக்கட்ட பாதுகாப்பு!!
திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி இன்று திருப்பதி செல்லவுள்ளார். இன்றிரவு திருமலையில் தங்கும் அவர், நாளை காலை 8 மணிக்கு வெங்கடேசப் பெருமானை தரிசிக்க உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
பிரதாமருடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் திருமலை செல்லவுள்ளனர். பிரதமர் மோடி வருகையையொட்டி, திருமலை திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபடவுள்ளார். சுமார் 6 கூட்டங்களிலாவாது அவர் பங்கேற்பார் என தெரிகிறது. மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன.
அம்மாநிலத்தில், பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.