மீண்டும் பாஜகவுடன் கூட்டணி..? ஜெகன் மோகனுக்கு அதிர்ச்சி தந்த சந்திரபாபு நாயுடு!!!

ஆந்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச பார்ட்டி எனும் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை, உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா டெல்லியில் நேற்று மாலை சந்தித்து பேசினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. பாஜக உடனான தங்களது கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க தயாராக உள்ளதாக, சந்திரபாபு நாயுடு கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகாக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தபிறகு, அந்த கூட்டணியில் இருந்து முதலில் விலகியவர் சந்திரபாபு நாயுடு தான். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் தொடர்ந்து நீடித்த தாமதம் காரணமாக, 2018ம் ஆண்டு அப்போது அந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்.

அதைதொடர்ந்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தவர், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தார்.

இந்த நிலையில் தான், கடந்த சில மாதங்களாக பாஜக உடன் கூட்டணி அமைக்கும் வகையில் சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு தொலைநோக்கு பார்வையாளர், அவர் தேசத்தின் கௌரவத்தை நிலைநிறுத்துகிறார் மற்றும் இந்தியாவின் வலிமையை உலகிற்குக் காட்டினார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் மோடியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தான், சந்திரபாபு நாயுடுவிற்கு அமித் ஷா உடனான இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அண்டை மாநிலமான தெலங்கானாவில் முக்கிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பாஜக பெற்று இருந்தாலும், ஆந்திராவில் நிலையான இடத்தை பெறமுடியாமல் தவித்து வருகிறது.

குறிப்பாக அந்த மாநிலத்தில் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தினரிடையே ஆதரவை பெற முடியவில்லை. இந்த சூழலில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளும் தங்களது உறவை புதுப்பித்தால், ஆந்திரா மற்றும் பிற தென் மாநிலங்களில் தனது கால்தடத்தை விரிவுபடுத்துவதை லட்சிய இலக்காகக் கொண்டுள்ள பாஜகவிற்கே பெரும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

9 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

9 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

10 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

11 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

11 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

11 hours ago

This website uses cookies.