அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிக்குகையை நோக்கிய புனித யாத்திரை தற்போது தொடங்கி நடந்து வருகிறது. காஷ்மீரில் உள்ள இருமுகாம்களில் இருந்து ஜுன் 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை இந்த யாத்திரை நடக்கிறது. இதில், பங்கேற்க சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் மட்டுமல்லாது, பல்வேறு நாட்டவர்கள் கூட இந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அமர்நாத்தில் நேற்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத. இதனால், யாத்திரை மேற்கொண்டவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய விமானப்படையின் எம்.ஐ.17 ஹெலிகாப்டர்களும் இன்று மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. மேலும், 30 முதல் 40 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதேவேளையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.