கர்நாடகாவில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், கர்நாடகா அணைகள் நிரம்பி, அதிகளவிலான உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மழையின் காரணமாக ஆங்காங்கே விபத்துக்களும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனால், ஆம்புலன்ஸ் சேவைகள் தொடர்ந்து தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.
அந்த வகையில், உடுப்பி பகுதியில் நோயாளியை ஏற்றிக் கொண்டு மருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த டோல்கேட்டை கடக்க முயன்றது. ஆம்புலன்ஸின் சைரன் சத்தத்தை கேட்ட டோல் கேட் ஊழியர்கள் உடனடியாக தடுப்புகளை அகற்றி, ஆம்புலன்ஸுக்கு வழிவிடும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது, டோல்கேட் அருகே வந்த ஆம்புலன்ஸ், சாலையின் ஈரப்பதத்தினால் வழுக்கி தூக்கி வீசப்பட்டது. இதனால், அந்த வாகனம் டோல் கேட்டின் அறையின் மீது வேகமாக தூக்கி அடிக்கப்பட்டது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
This website uses cookies.