பிரியாணிக்காக 18 வயது வாலிபரை . 60 முறை தொண்டையில் கத்தியால் குத்தி கொன்ற சிறுவன் : பிணம் மீது ஏறி டான்ஸ்.. ஷாக் சிசிடிவி!!!
வடகிழக்கு டெல்லியின் வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இரவு சுமார் 11.15 மணியளவில் 18 வயதுடைய வாலிபர் ஒருவர் வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் இறந்துகிடப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ரத்தவெள்ளத்தில் கிடந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகள் கிடைத்துள்ளன.
சிசிடிவி காட்சிகளில், 18 வயதுடைய வாலிபரை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி இழுத்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. மேலும் அந்த வாலிபர் இறந்ததை உறுதிசெய்ய அவரது கழுத்தில் சிறுவன் பலமுறை குத்தியதுடன், ஒருகட்டத்தில் அந்த சடலத்தின் மீது ஏறி நின்று நடனம் ஆடியுள்ளான்.
வாலிபரிடம் இருந்த பணத்தைத் திருடும்போது தடுத்ததே கொலைக்கான காரணம் என்று கூறப்படுகிறது. அவர் இறந்தபிறகு அவர் வைத்திருந்த ரூ.350 ரூபாயை எடுத்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவனிடம் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது சிறுவன் போதையில் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் சிறுவன், கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.