ஆந்திரா: வயிற்றுப் பிழைப்புக்காக குவைத்திற்கு வேலைக்கு சென்று பாலைவனத்தில் சிக்கித் தவித்த ஆந்திர தொழிலாளி சிவாவை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள ராயலப்பாடு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவா ஏஜென்ட் ஒருவர் மூலம் ஆடு மேய்க்க தொழில் செய்ய குவைத்துக்கு சென்றிருந்தார். அவரை அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பாலைவனம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ஷெட்டில் அடைத்து வைத்த குவைத் முதலாளி அங்கிருக்கும் ஆடுகள், வாத்துக்கள் ஆகியவற்றை பார்த்து கொள்ளும் வேலையை ஒப்படைத்து இருந்தார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பேச்சு துணைக்கு கூட யாரும் இல்லாமல் பாலைவனத்தின் நடுவே சிக்கி தவித்த சிவா தன்னுடைய நிலை பற்றி வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோ வேகமாக பரவி ஊடகங்கள் மூலம் ஆந்திர அரசின் காதுகளுக்கு எட்டியது.
அவரை விரைவில் மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று ஆந்திர அமைச்சரும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆன நாரா லோக்கேஷ் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தெலுங்கு தேசம் கட்சியின் வெளிமாநில அணியினர் அவரை தொடர்பு கொண்டு குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்டு தூதரகத்திற்கு அழைத்து வந்து பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில், அவர் அங்கிருந்து விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இன்று மதியம் சொந்த ஊரை அடைந்தார். அவரை மீட்க உதவிய அனைவருக்கும் அவரும் அவரது குடும்பத்தாரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.