ஆந்திரா : விசாகப்பட்டினம் அருகே நபர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி பாலத்தின் அடியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாகப்பட்டினம் மாவட்டம் அனக்கா பள்ளி சமீபத்தில் உள்ள கொத்தபள்ளம் கிராமம் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில் நபர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டிய மர்ம நபர்கள், உடல் பாகங்களை அங்குள்ள பாலத்தின் அடியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் வீசி சென்று விட்டனர்.
அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர்கள் தண்ணீரில் உடல் பாகங்கள் மிதப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து சென்ற போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனக்காப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட நபர் யார்..? அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய நபர்கள் யார், யார்..? என்று விசாரணை நடத்துகின்றனர். கொலை நடந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.