திருப்பதி: ஆந்திரா அருகே நடுரோட்டி சரக்கு லாரி ஒன்று தீவிபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஆதங்கி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பெரிய சரக்கு லாரி திடீரென்று தீப்பற்றி முழுவதுமாக எரிந்து எலும்பு கூடானது. லாரி என்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்த டிரைவர் லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தி கீழே இறங்கி விட்டார்.
இந்த நிலையில், என்ஜின் பகுதியில் இருந்து பரவிய தீ லாரி முழுவதும் தொற்றி எரிய துவங்கியது. இதனை கவனித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர். அதற்குள் லாரியில் ஏற்றப்பட்டு இருந்த சரக்குகளும் லாரியுடன் மொத்தமாக எரிந்து சாம்பலாக்கி விட்டன. தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ஆதங்கி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.