தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியை தடுத்து நிறுத்தி, மனைவி கண்முன்னே கணவனை மர்ம நபர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்தை சேர்ந்தவர்கள் நாகராஜ் மற்றும் சையத் ஆஸ்ரின் சுல்தானா. இருவரும் கல்லூரியில் படித்த நாட்களிலிருந்து காதலித்து வந்ததை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி ஆரிய சமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நாகராஜ் தனது மனைவி சையத் ஆஸ்ரின் சுல்தானா உடன் நேற்று இரவு கருமான் காட் பகுதியிலிருந்து சரூர் நகர் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது, சரூர்நகர் நகராட்சி அலுவலகம் எதிரில் இவர்களுடைய வாகனத்தை நிறுத்திய மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் நாகராஜ் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சையத் ஆஸ்ரின் சுல்தானா, உதவிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை அழைத்த போதும், உதவ யாரும் முன் வராத நிலையில், நாகராஜ் மேலே படுத்து அடி விழாதவாறு காப்பாற்ற முயன்றார். இருப்பினும், அதற்குள் பலத்த காயமடைந்த நாகராஜ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சரூர் நகர போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் நாகராஜ் மற்றும் சையத் ஆஸ்ரின் சுல்தானா திருமணத்திற்கு சுல்தானா தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு இருந்த நிலையில், ஆணவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.