ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ரண்ட்டசிந்த்தலா கிராம பகுதியில் சென்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.
பல்நாடு மாவட்டம் ரண்ட்டசிந்த்தலா கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாய பணி நிறைவடைந்ததை அடுத்து நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மல்லிகார்ஜுன சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர்கள் பயணித்த டாட்டா ஏஸ் வாகனம் பல்நாடு மாவட்டம் ரண்ட்டசிந்த்தலா கிராமத்தின் அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் கவிழ்ந்த டாட்டா ஏஸ் வாகனத்தில் 38 பேர் பயணம் செய்த நிலையில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த ரண்ட்டசிந்த்தலா போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மரணமடைந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
ஊருக்கு வந்தடைய சில நிமிடங்களே இருந்த நிலையில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் விபத்தில் பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
This website uses cookies.