நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆந்திராவின் முக்கிய பிரதான கட்சிகள் ஆணுறையில் தங்களது கட்சியின் சின்னத்தை பொறித்து மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச் 9ம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஏப்ரல் மாதத்தின் 2வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவைப் பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னணி எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) ஆகிய இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எனவே, தற்போது முதலே இரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு கட்சியினரிடையேயும் ஆணுறை தேவை ஏற்பட்டுள்ளது. அதாவது, தங்களின் கட்சி சின்னத்தை ஆணுறையின் பாக்கெட்டில் அச்சிட்டு, பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.
ஆந்திரா அரசியலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஆணுறை முக்கிய பங்காற்றி வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களை வீடு வீடாகச் சென்று சந்திக்கு இந்தக் கட்சியினர், ஆணுறை பாக்கெட்டுகளை விநியோகித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இருவரும் கட்சியின் சின்னத்துடன் ஆணுறைகளை விநியோகித்து வந்தாலும், ஆணுறைகளை விநியோகிப்பதற்காக ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்றனர்.
“இது ஆணுறையுடன் நிறுத்தப்படுமா அல்லது பொதுமக்களுக்கு வயாகராவையும் கொடுக்கத் தொடங்கி விடுவார்களா..?” என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.