வெள்ளக்காடாக மாறிய ஆந்திரா, தெலுங்கானா : ஒரே நாளில் மழைக்கு 10 பேர் பலி..!!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஏரிகள் நிரம்பி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக தெலங்கானாவில் மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பல கிராமங்கள் வெள்ளநீரால் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்

குறிப்பாக விஜயவாடாவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அதிக அளவில் மழை பெய்து இருப்பதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இதற்கிடையே மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை மீட்பதற்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா, தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தென் மத்திய ரயில்வே 9 ரயில்களை வெவ்வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது .

6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐந்து ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம், கேசமுத்திரம் மண்டலம் தல்லபூசப்பள்ளி ரயில் நிலையம் அருகே மழை வெள்ளத்தால் ரயில்வே தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மஹபூபாபாத்தில் நிறுத்தப்பட்டது,பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

48 seconds ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

4 minutes ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

34 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

1 hour ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

1 hour ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

2 hours ago

This website uses cookies.