மகாராஷ்டிரா அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் : குஷியில் பாஜக.. மௌனம் காக்கும் சிவசேனா…!!

மராட்டிய மேல்சபைக்கு 10 எம்.எல்.சி.க்களை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 11 பேர் போட்டியிட்டதால் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர்.

மும்பையில் உள்ள சட்டசபை வளாகத்தில் வாக்குப்பதிவு நடந்தது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 285 எம்.எல்.ஏ.க்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து, சிவசேனா தலைவர்களில் ஒருவர் மற்றும் மராட்டிய மந்திரியான ஏக்நாத் ஷிண்டேவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் சேர்ந்து பல எம்.எல்.ஏ.க்களும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என மராட்டிய அரசியல் வட்டாரம் கூறுகிறது.
அவர்கள் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்று விட்டனர் என கூறப்படுகிறது. இதேபோன்று, 15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

இதுபற்றி சஞ்சய் ராவத் கூறும்போது, மகா விகாஸ் அகாடி அரசை கவிழ்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து மராட்டியம் மிக வேறுபட்டது என்று பா.ஜ.க. நினைவில் கொள்ள வேண்டும். ஏக்நாத் ஷிண்டே ஜியை எனக்கு நன்கு தெரியும். அவர் ஓர் உண்மையான சிவசேனா சேவகர். எந்த நிபந்தனையும் இன்றி அவர் திரும்பவும் வருவார்.

குஜராத்தின் சூரத் நகரில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என நான் கேள்விப்பட்டேன். அவர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள். நாம் அனைவரும் சிவசேனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என கூறியுள்ளார். அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைத்தும் நன்றாக முடியும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:- தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களை உண்ணிப்பாக கவனித்து வருகிறோம். சிவசேனாவில் நிலவும் குழப்பத்திற்கு சஞ்சய் ராவத்தின் அடாவடித்தனமான பேச்சுதான் காரணம். மராட்டிய அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு தற்போது பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது.

அடுத்து என்ன நடக்கிறது என்பதை அறிய காத்திருக்கிறோம். மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த முன்மொழிவும் வரவில்லை. கட்சியிடம் இருந்தோ, ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்தும் எந்த முன்மொழிவும் வரவில்லை, ஆதலால் மராட்டிய அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

7 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

9 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

9 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

10 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

10 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

11 hours ago

This website uses cookies.