நெருங்கும் தேர்தல்.. பட்ஜெட் தாக்கல் : நாட்டு மக்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்? எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வுக்கு முன்னர் பாரம்பரியமாக செய்யப்படும் “அல்வா” சமைத்தல் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்ற நிலையில், பட்ஜெட்டின் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்த சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, நாளை (ஜனவரி 30ஆம் தேதி) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஏப்ரல்-மே மாதங்களில் எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக, மத்திய பாஜக அரசின் கடைசி கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31ம் தேதி தொடங்கி பிப். 9ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது. ஜனவரி 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற இடைக்கால மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.