முன்னாள் முதலமைச்சரை கைது செய்ய மும்முரம்? கொலை வழக்கு பதிந்த ஆளுங்கட்சி.. தொண்டர்கள் கொதிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
12 ஜூலை 2024, 6:31 மணி
ysr
Quick Share

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், உண்டி தொகுதி தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ ரகுராம கிருஷ்ணம்ராஜூ புகாரின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் , சிஐடி டி.ஜிபி மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் எம்.பியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ரகுராமகிருஷ்ணம் ராஜு சில மாதங்களில் பின்னர் ஜெகன் மோகனுடன் ஏற்பட்ட முரன்பாடான அனுகுமுறையால் அவரை விமர்சிக்க தொடங்கினார்.

அந்த நேரத்தில் அவரை பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சி.ஐ.டி. போலீசார் கைது செய்து அடித்து துன்புறுத்தினர். பின்னர் தெலுங்கு தேச கட்சியில் இணைந்த ரகுராமகிருஷ்ண ராஜு உண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தன்னை பொய் வழக்கில் கைது செய்து அடித்து துன்புறுத்தி கொலை முயற்சி செய்ததாக குண்டூர் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து முன்னாள் சிஐடி டி.ஜி.பி. சுனில் குமார், உளவுத்துறை தலைவர் சீதாராமஞ்சநேயுலு, முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, அப்போதைய சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி விஜய் பால் ஆகியோர் மீது போலீஸ் காவலில் இருந்தபோது கொலை முயற்சிக்கு காரணமானதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குண்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாவதி தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்ததாக அவர் மீது புகார் அளித்ததால் அவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 228

    0

    0