ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், உண்டி தொகுதி தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ ரகுராம கிருஷ்ணம்ராஜூ புகாரின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் , சிஐடி டி.ஜிபி மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் எம்.பியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ரகுராமகிருஷ்ணம் ராஜு சில மாதங்களில் பின்னர் ஜெகன் மோகனுடன் ஏற்பட்ட முரன்பாடான அனுகுமுறையால் அவரை விமர்சிக்க தொடங்கினார்.
அந்த நேரத்தில் அவரை பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சி.ஐ.டி. போலீசார் கைது செய்து அடித்து துன்புறுத்தினர். பின்னர் தெலுங்கு தேச கட்சியில் இணைந்த ரகுராமகிருஷ்ண ராஜு உண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தன்னை பொய் வழக்கில் கைது செய்து அடித்து துன்புறுத்தி கொலை முயற்சி செய்ததாக குண்டூர் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து முன்னாள் சிஐடி டி.ஜி.பி. சுனில் குமார், உளவுத்துறை தலைவர் சீதாராமஞ்சநேயுலு, முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, அப்போதைய சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி விஜய் பால் ஆகியோர் மீது போலீஸ் காவலில் இருந்தபோது கொலை முயற்சிக்கு காரணமானதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குண்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாவதி தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்ததாக அவர் மீது புகார் அளித்ததால் அவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.