5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப்பிலும் ஆம்ஆத்மி வெற்றி பெற்றது. 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்தத் தேர்தல் காங்கிரஸ் வரலாற்றில் ஒரு கருப்பு நிகழ்வாகும்.
படுதோல்வியை சந்தித்ததால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகளும் பரிதாபப்படும் நிலையில் இருந்து வருகிறது. மேலும், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல்தான் தங்களுக்கு கடைசி வாய்ப்பு என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். அதேவேளையில், பாஜகவுக்கு எதிராக அணி திரள வேண்டியதை இந்தத் தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாகவும் எதிர்கட்சியினர் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட தயார் என்று கூறி, காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது :- 5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம். நேர்மறையாக சிந்தியுங்கள். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லாதது. உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைத்துவிடவில்லை. சமாஜ்வாடி கட்சியை தோற்கடிக்க வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டது.
காங்கிரஸை நம்பி எதுவும் நடக்காது. அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மேலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவர்கள் என்னை ஒதுக்கினாலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அவர்களாவது ஒன்றாக இருக்கட்டும், எனக் கூறினார்.
ஏற்கனவே, தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதில் அக்கட்சி தோல்வியடைந்துவிட்டதாகவும், காங்கிரஸ் அல்லாத மாற்று தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இப்படியிருக்கையில், மம்தாவின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்குமா..? என்பது சந்தேகம்தான். அதேவேளையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை ஒதுக்குவதும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படும்.
இதனிடையே, படுதோல்வியால் நிலைகுலைந்து போயுள்ள சந்தர்ப்பந்தத்தை மம்தா பானர்ஜி பயன்படுத்திக் கொள்வதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கீழ் காங்கிரசை கொண்டு வர, இது அடித்தளமாக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.