தெலங்கானா: செகந்திராபாத்தில் உள்ள மர கிடங்கு விற்பனை கடையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 11 தொழிலாளர்கள் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள போயகுண்டா பகுதியில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
நேற்று வேலை முடிந்த பின் வழக்கம் போல் அவர்கள் கடைக்கு உள்ளே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். இன்று அதிகாலையில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையில் பழைய மரங்களும் இருந்தன. மின்கசிவு காரணமாக ஏற்பட்டது என்று கருதப்படும் தீ மளமளவென்று பரவி கடை முழுவதும் பற்றி எரிய துவங்கியது.
12 பேர் கடைக்கு தூங்கி கொண்டிருந்த நிலையில் அவர்களில் 11 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாகி விட்டனர். ஒருவருக்கு தீவிர காயங்களுடன் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீ விபத்து பற்றி தகவல் அறிந்த செகந்திராபாத் தீயணைப்பு படையினர் 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அதற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.