மாலை போட்டு விரதம் இருப்பவர் போல் வேஷத்தில் வந்து தெலுங்கு தேசம் கட்சி உள்ளூர் தலைவரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி நகர தெலுங்கு தேச கட்சி பொறுப்பாளராக இருப்பவர் சேஷகிரி ராவ்.
இன்று காலை அவருடைய வீட்டிற்கு விஜயவாடா கனகதுர்கா கோவிலுக்கு மாலை போட்டு இருப்பவர் போன்ற வேஷத்தில் ஒருவர் வந்தார்.
சேஷகிரிராவை வெளியில் அழைத்து ஏதோ பேசி கொண்டிருந்த அந்த மர்ம நபர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதனால் கீழே விழுந்த சேஷகிரிராவின் கை, மார்பு ஆகிய உடல் பாகங்களில் காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த அவருடைய மனைவி படுகாயம் அடைந்த கணவரை மீட்டு உறவினர்கள் உதவியுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த துனி போலீசார் விரைந்து வந்து வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.