ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் அயோத்தியில் 108 அடி கொண்ட பிரமாண்ட ஊதுபத்தி ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆக.,5ல் ராமர் கோயில் கட்டுமானத்தை பூமி பூஜையுடன் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன் பிறகு கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதிர்ல, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தியில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேவேளையில், கோவிலுக்கு பல்வேறு தரப்பினர் காணிக்கைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், குஜராத்தின் வதோதரா நகரில் உருவாக்கப்பட்ட 108 அடி நீள ஊதுபத்தி அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 3,610 கிலோ எடையும், மூன்றரை அடி சுற்றளவும் கொண்ட இந்த வாசனை ஊதுபத்தி, இன்று ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வின் போது பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் எழுப்பினர்.
மிக பிரமாண்டமான ஊதுபத்தி ஏற்றப்பட்டதால் அயோத்தி நகர் முழுவதும் நறுமணம் பரவத் தொடங்கியது. இந்த ஊதுபத்தி முழுவதும் எரிந்து முடிக்க ஒன்றரை மாதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.