ஆந்திரா : பிறந்த பச்சிளம் குழந்தையை ரயில் கழிவறையில் விட்டுச்சென்ற தாய் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நேற்று காலை தன்பாத் அலேபி (13351) விரைவு ரயில் கழிப்பறையில் ஆண் சிசு ஒன்று உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் கழிப்பறையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் மீட்டு விசாகப்பட்டினம் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் கே.ஜி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தை நலமாக உள்ளதை உறுதி செய்த அதிகாரிகள், பெற்றோர்கள் குழந்தை வளர்க்க முன்வந்தால் குழந்தை வளர்ப்பிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.