ரூ.24 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பாலாப்பூர் கணேஷ் லட்டு : இந்த லட்டுக்கு அப்படி என்ன மவுசு? சுவாரஸ்ய பின்னணி!!

28 ஆண்டுகளுக்கு முன் 450 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையான பாலாப்பூர் கணேஷ் லட்டு இந்த ஆண்டு 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை.

ஹைதராபாத் நகரில் விநாயகர் சதுர்த்தி மிகவும் பிரசித்தம். அங்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக சுமார் 60 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகளை அமைத்து விநாயகர் சதுர்த்தி நடத்தப்படுகிறது.

ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய நகரங்களில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான விநாயகர் சிலைகள் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்படும்.

அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை மாநில அரசு மாபெரும் கிரேன்கள், லாரிகள் ஆகியவற்றை பயன்படுத்தி எடுத்து சென்று நகரில் உள்ள உசேன் சாகர் ஏரியில் கரைக்க வசதிகளை செய்து கொடுக்கும்.

அதே போல் ஹைதராபாத் நகரில் அமைக்கப்படும் விநாயகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று சமர்ப்பிக்கப்படும் லட்டுவை ஏலம் விடுவது வழக்கம். அவ்வாறு ஹைதராபாத்தில் உள்ள பாலாபூரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு 1994 ஆம் ஆண்டு முதன்முதலாக ஏலம் விடப்பட்டது.

அப்போது அந்த லட்டு 450 ரூபாய்க்கு ஏலம் போனது. அப்போது முதல் தற்போது வரை லட்டு ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1994 ஆம் ஆண்டு 450 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் விநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட லட்டுவை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வருகின்றனர்.

இதனால் ஆண்டுக்கு ஆண்டு லட்டு விலை எதிர்பாராத வகையில் அதிகரித்து 2004 ஆம் ஆண்டு 2,01,000 ரூபாயாக அமைந்தது. அதன் பின்னும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் லட்டு விலை உயர்ந்து 2010 ஆம் ஆண்டு 5 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது.

ஆனால் அதற்கு பின்னரும் ஆச்சரியப்படும் வகையில் 2011 ஆம் ஆண்டு 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும், 2012 ஆம் ஆண்டு ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும், 2013 ஆவது ஆண்டு 9 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும், 2015 ஆம் ஆண்டு 10 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கும், 2016 வது ஆண்டு 14,65,000 க்கும் பாலாப்பூர் கணபதி லட்டுவை பக்தர்கள் ஏலம் எடுத்தனர்.

கடந்த ஆண்டு 21 கிலோ உள்ள இந்த லட்டு 19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது. ஆனால் அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில் இந்த ஆண்டு 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

பாலப்பூர் கணேஷ் லட்டுவை ஏலம் எடுத்து தங்கள் ஊரில் தூவுவதால் ஊர் செழிப்படைகிறது என்றும் வயல்களில் தூவுவதால் விளைச்சல் அதிகரிக்கிறது என்றும் அதனை ஏலம் எடுக்கும் நபர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த லட்டுவை ஏலத்தில் எடுக்கும் நபர்கள் அவற்றை தங்கள் ஊர்களுக்கு கொண்டு சென்று விலை நிலம் உட்பட ஊர் முழுவதும் தூவி செழிப்படைகின்றனர். யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை என்று அவர்கள் அடித்து கூறுகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

9 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

9 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

11 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

11 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

11 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

12 hours ago

This website uses cookies.