கேரளாவில் பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த துக்கத்தில், மகனை கொலை செய்துவிட்டு, வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டம் உப்புத்துறையை சேர்ந்த டோம் என்பவர் நகை கடை ஊழியராவார். இவரது மனைவி லிஜா (38) தொடுபுழாவில் உள்ள கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2வது படிக்கும் பென் (7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 2வது முறையாக கர்ப்பமாக இருந்த லிஜா, கடந்த 28 நாட்களுக்கு முன்பு உப்புத்துறையில் உள்ள அவரது தாய் வீட்டில் வைத்து பெண் குழந்தை பிறந்தது.
கடந்த 14ம் தேதி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த லிஜா குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகவும், தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு மனமுடைந்த லிஜா, குழந்தை இறந்த துக்கத்தில் லிஜா வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், 16ம் தேதி லிஜாவையும், மகன் பென்னையும் வீட்டில் விட்டு, குடும்பத்தினர் குழந்தைக்கு இறுதி சடங்கு செய்வதற்காக அனைவரும் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டில் இருவரையும் காணாததால் அவர்களை தேடி அழைந்துள்ளனர்.
நீண்ட நேரம் தேடியும் அவர்கள் கிடைக்காத நிலையில், வீட்டிற்கு அருகே உள்ள 40 அடி ஆழ கிணற்றில் லிஜாவும், அவரது மகன் பென்னும் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்புத்துறையின் உதவியுடன் இருவரின் சடலமும் மீட்கப்பட்டது.
இருவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், போலீசார் விசாரணை நடத்தியதில், குழந்தை இறந்த துக்கம் தாங்காமல், மகனையும் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு, அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை இறந்த துக்கத்தில், மகனை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்வபம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.