ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஐந்து லிட்டர் கேன் ஒன்றில் பெட்ரோல் வாங்கிய நபர் ஒருவர் அந்த பெட்ரோல் கேனை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்றார்.
பேருந்து நிலையம் அருகில் உள்ள கடையின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த நபர் பெட்ரோல் கேனை மோட்டார் சைக்கிள் மீது வைத்து விட்டு கடைக்குள் சென்று இருந்தார்.
அப்போது பெட்ரோல் கேன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து அதில் இருந்த 5 லிட்டர் பெட்ரோல் சாலையில் கொட்டியது.
அதே நேரத்தில் அங்கு ஏதோ பேசி கொண்டிருந்த இரண்டு பேரில் ஒருவர் திடீரென்று பீடியை எடுத்து வாயில் வைத்து பற்றவைத்தார்.
பின்னர் பீடி பற்ற வைக்க பயன்படுத்திய தீக்குச்சியை அசால்டாக சாலையில் வீசி எறிந்தார்.
சாலையில் கொட்டி கிடந்த பெட்ரோல் மீது பட்ட தீக்குச்சி பெறும் தீ விபத்தை ஏற்படுத்தி அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஒரு கடை ஆகியவை தீயில் எரிந்து சாம்பல் ஆகிவிட்டன.
அங்கிருந்தவர்கள் உடனடியாக பக்கெட்களில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி பரவிய தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
This website uses cookies.