பிச்சையா எடுக்குற? 1 ரூபாய்க்காக நண்பன் கொலை.. பிரியாணியால் வந்த வினை : அதிர்ச்சி சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan2 ஜூன் 2024, 12:58 மணி
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மில்ஸ் காலனி கரீப்நகர் கோர்ரெகுண்டாவை சேர்ந்த இசம்பள்ளி பிரேம்சாகர் (38) ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் காந்திநகரில் உள்ள நபி பிரியாணி கடையில் ₹ .59க்கு சிக்கன் பிரியாணி வழங்கும் கடைக்கு பிரேம்சாகர் சென்றார்.
அதே நேரத்தில் காந்திநகரை சேர்ந்த ஜன்னு அரவிந்த் அங்கு வந்தார். இருவரும் நண்பர்கள் ஆவார் இந்நிலையில் பிரேம்சாகர் பிரியாணிக்கு போன்பே மூலம் ₹.59க்கு பதிலாக ₹.60 செலுத்தினார்.
இதற்கு பக்கத்தில் நின்றிருந்த அரவிந்த் நீயே ஒரு ஆட்டோடிரைவர் கூடுதலாக பிரியாணிக்கு ₹ 1 தருகிறாயே அவ்வளவு பெரிய ஆலாகி விட்டாயா என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே நடந்த சிறு சண்டையால் கோபமடைந்த பிரேம்சாகர் நான் என்ன பிச்சை எடுக்கிறேனா?’ என்று கூறிக்கொண்டே அரவிந்த் தனது கால்களால் பிரேம்சாகரை எட்டி உதைத்தார்.
இதில் பிரேம்சாகர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது சாலையில் இருந்த கல் பிரேம்சாகர் தலையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டு சிறுமூளையில் அடிப்பட்டு மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வழிந்து அவர் சுயநினைவை இழந்தார்.
அதே நேரத்தில் அங்கு வந்த பிரேம்சாகரின் தம்பி வித்யாசாகருடன் அரவிந்த் பிரேம்சாகரை ஆட்டோவில் வாரங்கல் எம்ஜிஎம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 1 மணியளவில் பிரேம்சாகர் இறந்தார். இதனையடுத்து அரவிந்த் உடனடியாக மருத்துவமனையில் இருந்து நேரடியாக மில்ஸ் காலனி காவல் நிலையத்திற்கு போலீசில் சரணடைந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மல்லையா கூறுகையில், இறந்தவரின் சகோதரர் வித்யாசாகர் அளித்த புகாரின் பேரில் அரவிந்த் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
0
0