தெலங்கானா மாநிலம் வாரங்கல் மில்ஸ் காலனி கரீப்நகர் கோர்ரெகுண்டாவை சேர்ந்த இசம்பள்ளி பிரேம்சாகர் (38) ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் காந்திநகரில் உள்ள நபி பிரியாணி கடையில் ₹ .59க்கு சிக்கன் பிரியாணி வழங்கும் கடைக்கு பிரேம்சாகர் சென்றார்.
அதே நேரத்தில் காந்திநகரை சேர்ந்த ஜன்னு அரவிந்த் அங்கு வந்தார். இருவரும் நண்பர்கள் ஆவார் இந்நிலையில் பிரேம்சாகர் பிரியாணிக்கு போன்பே மூலம் ₹.59க்கு பதிலாக ₹.60 செலுத்தினார்.
இதற்கு பக்கத்தில் நின்றிருந்த அரவிந்த் நீயே ஒரு ஆட்டோடிரைவர் கூடுதலாக பிரியாணிக்கு ₹ 1 தருகிறாயே அவ்வளவு பெரிய ஆலாகி விட்டாயா என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே நடந்த சிறு சண்டையால் கோபமடைந்த பிரேம்சாகர் நான் என்ன பிச்சை எடுக்கிறேனா?’ என்று கூறிக்கொண்டே அரவிந்த் தனது கால்களால் பிரேம்சாகரை எட்டி உதைத்தார்.
இதில் பிரேம்சாகர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது சாலையில் இருந்த கல் பிரேம்சாகர் தலையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டு சிறுமூளையில் அடிப்பட்டு மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வழிந்து அவர் சுயநினைவை இழந்தார்.
அதே நேரத்தில் அங்கு வந்த பிரேம்சாகரின் தம்பி வித்யாசாகருடன் அரவிந்த் பிரேம்சாகரை ஆட்டோவில் வாரங்கல் எம்ஜிஎம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 1 மணியளவில் பிரேம்சாகர் இறந்தார். இதனையடுத்து அரவிந்த் உடனடியாக மருத்துவமனையில் இருந்து நேரடியாக மில்ஸ் காலனி காவல் நிலையத்திற்கு போலீசில் சரணடைந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மல்லையா கூறுகையில், இறந்தவரின் சகோதரர் வித்யாசாகர் அளித்த புகாரின் பேரில் அரவிந்த் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.