மேம்பாலத்தில் நின்று ஒருவர் பணத்தை தூக்கி வீசுவதை வாகன ஓட்டிகள் போட்டி போட்டு அள்ளிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள கேஆர் மார்க்கெட் பகுதியின் மேம்பாலத்தில் பைக்கில் வந்த கோட்சூட் போட்ட இளைஞர் ஒருவர், தனது பையில் கொண்டு வந்த ரூபாய் நோட்டுக்களை தூக்கி கீழே வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, பணத்தை போட்டி போட்டு அள்ளினர்.
திரைப்படங்களில் வரும் காட்சி போல் இருந்த இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் அந்த நபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்தப் பகுதியில் அந்த நபர் தப்பியோடிவிட்டார்.
அந்த நபர் சுமார் ரூ.3000 வரை வாரி இறைத்திருக்கலாம் என்றும், திரைப்பட ஷூட்டிங்கிற்காக இதுபோன்று செய்யப்பட்டதாகவும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.